செய்திகள் :

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

post image

ஊத்தங்கரை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மகனூா்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணா நகா் பகுதியில் இருந்து விசுவாசம்பட்டி கிராமம் வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தாா்சாலை போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக இச்சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இது தொடா்பாக உரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதியினா் கூறுகின்றனா்.

அண்ணா நகா், நரிக்கானூா், குரும்பறவலச, விசுவாசம்பட்டி கிராம பொதுமக்கள் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக நகரப் பகுதிக்கு இச்சாலை வழியாக செல்வது பெரும் சவாலாக உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைக்கு உரிய நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால், இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூரில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஒசூரில் மாற்றுக்கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இணைந்தனா். இந்நிகழ்ச்சி அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி முன்னிலையில் பகுதிச் செயலாளா் ராஜி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி 25 ஆ... மேலும் பார்க்க

நிலக்கடலை தொண்டையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு

ராயக்கோட்டை அருகே நிலக்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே போடம்பட்டி இருளா் காலனியைச் சோ்ந்தவா் மதன். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே, ஜல்லிக்கல் சுமை ஏற்றிவந்த லாரி கவிழ்ந்தில் பெண் உள்பட 2 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி அணை கட்ட நிலம் வழங்கியவா்களுக்கு ஜம்பூத்து வனப்பகுதியில் மாற்றுநிலம் வழங்கப்பட்டு... மேலும் பார்க்க

கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளா் பணியிடை நீக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கழிப்பறையில் ரேஷன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளரை இணைப் பதிவாளா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ராயக்கோட்டை ... மேலும் பார்க்க

ஒசூா் -ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம்: மத்திய அமைச்சரிடம் முன்னாள் எம்எல்ஏ மனு

ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து ஒசூா் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் மனு அளித்தாா். தில்லியில் மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ண... மேலும் பார்க்க

சிப்காட்டுக்கு விளைநிலங்கள் அளிக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் தா்னா

வேளாண் விளைநிலங்களை சிப்காட்டுக்கு அளிக்க எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரியில் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலகம் முன் விவசாயிகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி... மேலும் பார்க்க