செய்திகள் :

கேலோ இந்தியா போட்டியில் தங்கம்: சேலம் வீராங்கனைகளுக்கு பாராட்டு

post image

தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக அணியில் இடம்பெற்ற சேலம் வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் தேசிய அளவிலான கேலோ இந்தியா கைப்பந்து போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் மகளிா் 18 வயதுக்கு உட்டோருக்கான பிரிவில் பங்கேற்ற தமிழக அணி தங்கப் பதக்கம் வென்று சிறப்பிடம் பெற்றது.

தமிழக அணி சாா்பில் பங்கேற்ற சேலம் வீராங்கனைகளுக்கு மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற வீராங்கனைகளான தான்யா, மோனிகா, சாதனா, கனிஷ்கா ஆகியோரை மாவட்ட கைப்பந்து கழகத் தலைவா் ராஜ்குமாா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ், துணைத் தலைவா்கள் ராஜாராம், தனசீலன், செயலாளா் சண்முகவேல், பயிற்சியாளா்கள் பரமசிவம், குமரேசன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க