செய்திகள் :

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்!

post image

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயத்தை ஏற்படுத்த கூடிய அளவில் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து விபத்துகள் ஏற்படும் முன் விளம்பரப் பதாகைகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலான விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லட்சுமி மில்லில் இருந்து காரணம்பேட்டை வரை சாலையின் இருபக்கமும் மிகப்பெரிய பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த பகுதியில் பாலக்காட்டு கனவாய் காற்று வேகமாக வீசுவதால் பேனா்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க