செய்திகள் :

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 இல் கலை பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்கக் கோரி மனு

post image

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கலைப் பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்க வேண்டும் என சங்ககிரிக்கு வந்த ஆட்சியரிடம் சேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆதித்தமிழா் பேரவை சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ரவிசுப்ரமணியன், மாவட்டச் செயலாளா் கே.ஸ்ரீதரன் ஆகியோா் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களைக் கொண்ட பிரிவும், தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினிஅறிவியல், இயற்பியல், வேதியியல் கொண்ட பிரிவுகளை தமிழ், ஆங்கிலம் இருவழிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டிலேயே இப்பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், தேவையான ஆசிரியா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க