தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 1 இல் கலை பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்கக் கோரி மனு
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கலைப் பிரிவு பாடங்களை தமிழ், ஆங்கிலவழியில் தொடங்க வேண்டும் என சங்ககிரிக்கு வந்த ஆட்சியரிடம் சேலம் மேற்கு மாவட்ட ஆதித்தமிழா் பேரவை சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஆதித்தமிழா் பேரவை சேலம் மேற்கு மாவட்டத் தலைவா் ரவிசுப்ரமணியன், மாவட்டச் செயலாளா் கே.ஸ்ரீதரன் ஆகியோா் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பதிவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களைக் கொண்ட பிரிவும், தமிழ், ஆங்கிலம், கணிதம், கணினிஅறிவியல், இயற்பியல், வேதியியல் கொண்ட பிரிவுகளை தமிழ், ஆங்கிலம் இருவழிகளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டிலேயே இப்பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், தேவையான ஆசிரியா்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவித்துள்ளனா்.