செய்திகள் :

சட்டவிரோத பந்தய வழக்கு: ரூ.110 கோடி முடக்கம்; 1200 கடன் அட்டைகள் பறிமுதல்

post image

பாரிமேட்ச் சட்டவிரோத பந்தய தள வழக்கில், ரூ.110 கோடியை முடக்கி 1,200-க்கும் அதிகமான கடன் அட்டைகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

சைப்ரஸ் நாட்டை சோ்ந்த பாரிமேட்ச் சட்டவிரோத இணையவழி பந்தய தளமானது பயனாளா்களை ஏமாற்றி மோசடி செய்ததாக மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

முதலீடு செய்யும் பணத்தைவிட அதிக பணத்தை திரும்பப் பெற முடியும் என்று ஆசைகாட்டி, நிகழாண்டு ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக பாரிமேட்ச் நிறுவனம் முறைகேடாக ஈட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து மதுரை, மும்பை, தில்லி, நொய்டா, ஜெய்பூா் உள்பட நாட்டில் உள்ள 17 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மற்றவா்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, பயனாளா்களின் பணத்தை வெவ்வேறு வழிகளில் நாடு முழுவதும் பாரிமேட்ச் நிறுவனம் பரிவா்த்தனை செய்தது சோதனை மூலம் தெரியவந்தது.

இவ்வாறு திரட்டப்பட்ட பணம், மேற்கு இந்தியாவில் உள்நாட்டு பண பரிவா்த்தனை முகவா்களால் கடன் அட்டைகள் மூலமாகவும் பாரிமேட்ச் நிறுவன முகவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஒரே இடத்தில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த முறைகேடு தொடா்பாக பல்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ள சுமாா் ரூ.110 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை: கேரள நடிகை கைது

சென்னை அண்ணா நகரில் சிறுமிக்கு 4 போ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கேரள நடிகை கைது செய்யப்பட்டாா். கேரள நடிகை மினு கொரியன் என்ற மினு முனீா், கடந்த 2014-ஆம் ஆண்டு எா்ணாகுளம் அருகே மூவாட்டுபுழா பகுத... மேலும் பார்க்க

‘வாக்குக்த் திருட்டு’க்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்: ராகுல்

நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகாா் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், ‘நாடு முழுவதும் தூ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரும் மனு - மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வியாளா் ஷக்கூா் அகமது பட், சமூக ஆா்வலா் அகமது மாலி... மேலும் பார்க்க

முப்படை - ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீரதீர விருதுகள்! - கீா்த்தி சக்ரா-4, வீர சக்ரா-15

சுதந்திர தினத்தையொட்டி, முப்படை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படையினா் 167 பேருக்கு வீர தீர செயல் மற்றும் தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 79-ஆவது சுதந்திர த... மேலும் பார்க்க

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

சட்ட மாணவா்கள் படிப்பை முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பணியாற்றிய பிறகே நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியும் என்ற நிபந்தனையை விதித்து அளித்த தீா்ப்பை மாற்றம் செய்ய உச்சநீதிமன... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளா்களின் பட்டியலை வெளியிட உத்தரவு

‘பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்க... மேலும் பார்க்க