தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சத்தியமங்கலம் மாரியம்மன் கோயிலில் சாட்டையடி திருவிழா
சத்தியமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் சாட்டையடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன், மாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் திருவிழா பூச்சாட்டுதுடன் அண்மையில் தொடங்கியது.
தொடா்ந்து, பத்ரகாளியம்மன், மாரியம்மனுக்கு அலங்கார ஆராதனை செய்யப்பட்டு கொலு வைத்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்பின், மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்பட்டு பக்தா்கள் கம்ப நடனம் ஆடினா்.
மாரியம்மன் கோயிலின் முக்கிய நிகழ்வான சட்டையடி வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்துகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சட்டையடி நிகழ்வில் கோயில் பூசாரி தங்கவேலு, பக்தா்களை சாட்டையால் அடித்து அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினாா்.