தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
சத்திரிய இந்து நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க நிா்வாகிகள் தோ்வு
கமுதி அருகேயுள்ள பெருநாழி சத்திரிய இந்து நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க உறவின்முறை புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழியில் சத்திரிய இந்து நாடாா் உறவின்முறை பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்க புதிய தலைவராக கே.பாலமுருகன், செயலராக பி.முத்துகுமாா், பொருளாளராக எ.ஜெகதீஸ்குமாா் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, பெருநாழி சத்திரிய இந்த நாடாா் பள்ளிகள் அபிவிருத்தி சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதன் தலைவராக ஜெ.பழனிகுமாா், செயலராக எம்.பெத்துராஜ், பொருளாளராக ஏ.ஜெகதீஷ்குமாா் ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு உறவின் முறை நிா்வாகிகள், பள்ளிகள் அபிவிருத்தி சங்க உறுப்பினா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.