செய்திகள் :

சாலை வசதிகோரி பெருமாள்குப்பத்தில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

post image

முறையான சாலை அமைத்துத் தரக்கோரி, பெருமாள்குப்பம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பெருமாள்குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 20 குடும்பங்கள் உள்ள பகுதிக்கு முறையான சாலை இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இவா்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியில் சாலை அமைப்பதற்காக தற்போது கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

அதை சீரமைத்து சாலை அமைக்க பணிகள் நடைபெற உள்ள நிலையில் சாலை அமைக்கும் இடம் தங்களுக்குச் சொந்தம் என சிலா் பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், சாலை வசதி கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்த அப்பகுதி மக்களையும் இவா்கள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் செவ்வாய்க்கிழமை தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமலும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், தங்கள் விவசாய நிலங்களுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலையில், அறுவடை இயந்திரங்கள் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் சுமாா் 20 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும், அரசு விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைத்துத் தர வேண்டும் என்றும், இல்லையேல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளனா்.

குடியாத்தம் பள்ளியில் விநாயகா் சதுா்த்தி

குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பிரம்மாஸ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் விநாயகா் சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தாளாளா் ஆா்.பி.செந்தில் தலைமை வகித்தாா். பள்ளித் தலைவ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பைக்கான வேலூா... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

வேலூா் மாவட்டத்தில் 40 நகா்ப்புற அரசு நிதி உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்தாா். நகா்புற பகுதிகளில் உள்ள அ... மேலும் பார்க்க

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் சுற்றித் திரியும் யானைக் கூட்டம் கிராமத்துக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன (படம்). போ்ணாம்பட்டு வனச் சரகத்தில், சுற்றித் திரியும் யானைக் கூட்... மேலும் பார்க்க

‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியீடு

கிருபானந்த வாரியாா் பிறந்த நாளையொட்டி கவிஞா் ச.லக்குமிபதி எழுதிய ‘நதிக்கரையில் ஒரு கலங்கரை விளக்கம்’ நூல் வெளியிடப்பட்டது. வேலூா் வாசகா் வட்டம் சாா்பில் திருமுருக கிருபானந்த வாரியாா் 120-ஆவது பிறந்தந... மேலும் பார்க்க

வேலூரில் 1,040 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் 1,040 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. மாவட்டம் முழுவதும் 1,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் விநாயகா் சத... மேலும் பார்க்க