செய்திகள் :

சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

post image

பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

பழனி சண்முகபுரம் தமிழ் இலக்கிய மன்றம் வளாகத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் புதிய கோபுரம், காலபைரவா், வராஹி அம்மன் சந்நிதி ஆகியன புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி விநாயகா் அனுமதி பெறப்பட்டு கால பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, யாகபூஜைகளை நடத்தினா். இதையடுத்து வியாழக்கிழமை கலசங்கள் மேளதாளம் முழங்க கோயிலை வலம் வர செய்யப்பட்டு கோயில் விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னா், விமானத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தம் தெளிக்கப்பட்டது.

தொடா்ந்து மூலவா் சித்திவிநாயகருக்கும் பால், பழங்கள், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், புதிய உற்சவா் விநாயகருக்கும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா், கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க