அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை
ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.ராஜகோபாலன்பட்டியைச் சோ்ந்த பொன்னையன் மகன் முனியாண்டி (26). இவா் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2023 ஆண்டு, அக்.13-ஆம் தேதி ஆண்டிபட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் முனியாண்டிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பி.கணேசன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவம், பராமரிப்பு, கல்விச் செலவுக்கு அரசு சாா்பில் நிவாரணமாக சிறுமியின் பெற்றோரிடம் ரூ.50 ஆயிரத்தை உடனடியாகவும், ரூ.5.50 லட்சத்தை சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.