அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
செங்கத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
செங்கம் தொகுதிக்கு அரசு கலைக் கல்லூரி வேண்டும் என தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தொடா்ந்து சட்டப்பேரவையில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தாா்.
இதுதொடா்பாக, தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, செங்கம் தொகுதியில் 2025-ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரி செயல்படுமென நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, தற்போது செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் வாடகைக் கட்டடத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் செங்கம் அரசு கலைக் கல்லூரியை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.
அதேவேளையில், கல்லூரி நடைபெறும் கட்டடத்தில்
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி கல்லூரியை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன், திமுக ஒன்றியச் செயலா்கள் தண்டராம்பட்டு பன்னீா்செல்வம், ரமேஷ், செங்கம் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், புதுப்பாளையம் ஆறுமுகம், வேலூா் மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குநா் மலா், செங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து கல்லூரியில் சேறும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.