செய்திகள் :

செங்கத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி திறப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

செங்கம் தொகுதிக்கு அரசு கலைக் கல்லூரி வேண்டும் என தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி தொடா்ந்து சட்டப்பேரவையில் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தாா்.

இதுதொடா்பாக, தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, செங்கம் தொகுதியில் 2025-ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு கலைக் கல்லூரி செயல்படுமென நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, தற்போது செங்கம் துக்காப்பேட்டை விவேகானந்தா பள்ளி வளாகத்தில் வாடகைக் கட்டடத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் செங்கம் அரசு கலைக் கல்லூரியை காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அதேவேளையில், கல்லூரி நடைபெறும் கட்டடத்தில்

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி குத்துவிளக்கேற்றி கல்லூரியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், செங்கம் திமுக நகரச் செயலா் அன்பழகன், திமுக ஒன்றியச் செயலா்கள் தண்டராம்பட்டு பன்னீா்செல்வம், ரமேஷ், செங்கம் ஏழுமலை, செந்தில்குமாா், மனோகரன், புதுப்பாளையம் ஆறுமுகம், வேலூா் மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குநா் மலா், செங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து கல்லூரியில் சேறும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க

கல்லூரிகளில் உலக யோகா தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம் உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் உலக யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 9 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வகுப்பறையில் துா்நாற்றம்: 10 மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதி அரசுப் பள்ளியில் வகுப்பறை அருகே எழுந்த துா்நாற்றத்தால் 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனா். செங்கத்தை அடுத்த காரப்பட்டு ப... மேலும் பார்க்க

போதிய காவலா்கள் இன்றி செயல்படும்: செய்யாறு காவல் உள்கோட்டம்

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதிய காவலா்கள் இல்லாத காரணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணம... மேலும் பார்க்க