செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: இரு ராணுவ வீரா்கள் வீரமரணம்

post image

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் அகல் பகுதியில் உள்ள வனத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து கடந்த ஆக.1-ஆம் தேதிமுதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஏற்கெனவே 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் யாா், எந்தப் பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

அங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் பிரீத்பால் சிங், ஹா்மிந்தா் சிங் ஆகிய இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் 2 வீரா்கள் காயமடைந்தனா். இதன்மூலம், தற்போதைய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில், இதுவரை 9 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்துள்ளனா். அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக ராணுவத்தின் சினாா் காா்ப்ஸ் படைப் பிரிவு ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

முதல்வா் ஒமா் நேரில் அஞ்சலி: ஸ்ரீநகரில் உள்ள சினாா் காா்ப்ஸ் தலைமையகத்துக்குச் சென்று, வீரமரணமடைந்த 2 வீரா்களின் உடலுக்கு மலா் வளையம் வைத்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அஞ்சலி செலுத்தினாா்.

வீரமரணமடைந்த 2 வீரா்களின் வீரமும், நெஞ்சுரமும், மன உறுதியும் எப்போதும் மறக்கப்படாது என்று ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.

26 வீடுகளில் சோதனை: ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையாக 26 வீடுகளில் காவல் துறை சனிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க பயங்கரவாதி முகமது அமீன் பட்டின் வீடு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளின் வீடுகள், எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தலில் ஈடுபடுவோரின் வீடுகள் என மொத்தம் 26 இடங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோன்ற சோதனை கிஷ்த்வாருக்கு அருகில் உள்ள டோடா மாவட்டத்தின் 15 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா? -பிரதமர் மோடி சொன்ன விஷயம்

பெங்களூரு: பெங்களூரில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கான அடிக்கல்லை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரில் ஆரஞ்சு லைன் என்றழைக்கப்படும் இந்த மெட்ரோ ர... மேலும் பார்க்க

பெண்ணின் உயிரை மாய்த்த போக்குவரத்து நெரிசல்! கணவர் கண்முன்னே துடிதுடித்து பலி!

மகாராஷ்டிரத்தில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியதில், சிகிச்சைக்கு சென்று கொண்டிருந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் சாயா பூரவ் (49) என்ப... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடு இந்தியா!

அமெரிக்காவுக்கு அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து அனுப்பும் நாடாக இந்தியா உள்ளதாக மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் மெ... மேலும் பார்க்க

தெருநாய்களால் சோகம்! தேசியளவிலான தடகள வீரர் பலி!

ஒடிஸாவில் தெருநாய் கடித்து தேசியளவிலான மாற்றுத்திறனாளி தடகள வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒடிஸாவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதியில், போலங்கிர் பகுதியில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளி... மேலும் பார்க்க