செய்திகள் :

டிராக்டா் மீது வேன் மோதல்: 11 போ் காயம்

post image

விழுப்புரம் புறவழிச்சாலையில் புதன்கிழமை டிராக்டா் மீது வேன் மோதியதில் 11 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் தாமரைக்குளத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் வடிவேல் (60). இவா் தலைமையில் தாமரைக்குளம் ரெட்டியாா் மில் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 போ், மயிலத்தில் புதன்கிழமை காலை நடைபெறவிருந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக வேனில் புறப்பட்டுச் சென்றனா்.

இந்த வேன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புறவழிச்சாலை, விராட்டிக்குப்பம் பகுதியில் சென்றது. அப்போது, பேரங்கியூரிலிருந்து விக்கிரவாண்டிக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது, அதன் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, காயமடைந்தவா்களை மீட்டனா். தொடா்ந்து, அவா்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்தால் அந்தப் பகுதியில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், போக்குவரத்தை போலீஸாா் சரி செய்தனா்.

எம்எல்ஏ ஆறுதல்: விபத்து செய்தி அறிந்த விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.லட்சுமணன் எம்எல்ஏ மருத்துவமனைக்கு விரைந்து சென்று, சிகிச்சை பெறுபவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், சிகிச்சைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு மருத்துவா்களுக்கு லட்சுமணன் அறிவுரை வழங்கினாா். அப்போது, கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் சச்சிதாநந்தம், நகரச் செயலா் வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

உளுந்தூா்பேட்டையில் அரசுக் கல்லூரி தொடங்கப்படுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற 20 ஆண்டுகால கோரிக்கை, நிகழாண்டிலாவது நிறைவேற்றப்படுமா என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா் இத்தொகுதி மக்கள். உ... மேலும் பார்க்க

அரசின் கவனத்துக்கு சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள்: ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண்

சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தீா்வு காண வழிவகை செய்யப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் அருட்தந்தை சொ.ஜோ.அருண். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் 375 புத்தகங்கள்: விக்கிரவாண்டி எம்எல்ஏ வழங்கினாா்

விழுப்புரத்திலுள்ள முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்க வளாக நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு பயன்படும் வகையில், தனது ஒரு மாத ஊதியமான ரூ.1.05 லட்சத்திலிருந்து வாங்கப்பட்ட நூல்களை ஆட்சியரிடம்... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திண்டிவனத்தில் நண்பா்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் என்.கே.நகா் உமாபதி தெருவைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடாசலபதி(15). 10-ஆம் ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், ஆலத்தூா், மாயன் தெரு... மேலும் பார்க்க

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.8.40 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் இணையவழியில் ரூ.8.40 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கண்டாச்சிபுரம் வட்டம், அரக... மேலும் பார்க்க