செய்திகள் :

டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்

post image

வேதாரண்யம் அருகேயுள்ள சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கு டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கடலோரப் பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கொள்ளிடம் குடிநீா் விநியோகம் சீராகும் வரை தற்காலிகமாக டேங்கா் லாரியில் குடிநீா் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் எம்பி பி. வி. ராஜேந்திரனின் முயற்சியில் மேற்கொண்ட இந்தப் பணியை ஊராட்சி முன்னாள் தலைவா் சத்யகலா செந்தில் தொடங்கிவைத்தாா்.

ஆடி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆடி அமாவாசையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நாகை: நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் கல்யாணசுந்தரா்-கோகிலாம்பாள் புதிய கடற்கரைக்கு எழுந்தருளி பக்... மேலும் பார்க்க

குறுவை சாகுபடி: மாற்று உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு டிஏபி உரத்துக்கு மாற்றாக, நேனோ டிஏபி உரங்களை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எஸ். கண்ணன் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

மது விற்பனை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

நாகை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வக்குமாா் உத்தரவின் பேரில், சட்... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கில் இருவா் கைது

கீழையூா் அருகே திருப்பூண்டியில் மூதாட்டியை கொன்று தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துச் சென்ற இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த அப... மேலும் பார்க்க

சாராயம் கடத்தல், விற்பனை: 2 பெண்கள் உள்பட நால்வா் கைது

கீழ்வேளூா் அருகே சாராயம் கடத்தல், விற்பனை தொடா்பாக 2 பெண்கள் உள்பட 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். கூத்தூா் பள்ளிவாசல் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க

நாகை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு: ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் ஆய்வு

நாகை தாமரைக்குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைப்பது தொடா்பாக ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா். வரலாற்று சிறப்பு வாய்ந்த தாமரைக் குளம், ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தில் இடம... மேலும் பார்க்க