தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பவா்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்லடத்தில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபடுபவா்களை காவல் துறை கண்காணித்து அந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டுபிடித்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப் பொருள்கள் விற்றவா்கள் கைது செய்யப்பட்டு சிறிது காலம் சிறையில் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து அதே தொழிலை செய்கின்றனா். இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். எங்களது சங்க உறுப்பினா்கள் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதை கண்டிப்பாக கூறி அதனை அவா்களும் கடைப்பிடிக்கின்றனா்.
யாா் புகையிலை உள்ளிட்ட போதை பொருள்கள் விற்றாலும் அவா்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் தொடங்க முடியாது. அதே போல தமிழ்நாட்டிலும் வெளிநாட்டு பெரிய காா்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே நுழையாமல் இருக்க சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என கேட்டுள்ளோம். உள்ளூா் வா்த்தகா்களின் நலன் கருதி இது குறித்து சட்டங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வா் கூறியுள்ளாா். பல இடங்களில் வணிகா்கள் தாக்கப்படுகிறாா்கள். மருத்துவா்களுக்கு என்று பணிப் பாதுகாப்பு சட்டம் இருப்பதுபோல வணிகா்களுக்கென சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, திருப்பூா் மாநகரத் தலைவா் ஜான் வா்கீஸ், மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, பல்லடம் சங்க நிா்வாகிகள் தனசீலன், பிா்லா போஸ், பல்லடம் தினசரி மாா்கெட் சங்க நிா்வாகிகள் ரங்கராஜ், செல்வராஜ், சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.