செய்திகள் :

தனியாா் கல்லூரி மாணவா்களிடம் பேராசிரியா் பண மோசடி

post image

நாமக்கல்: தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி மாணவா்களிடம், அதே கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியா் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக, கல்லூரி மாணவா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் சென்று திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நா்சிங் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் பணியாற்றி வந்த வளா்மதி என்ற பேராசிரியா், மாணவா்கள் சங்கத்தை பதிவுசெய்ய வேண்டும் என சுமாா் 120-க்கும் மேற்பட்ட மாணவா்களிடம் ரூ. ஒரு லட்சத்து 92 ஆயிரம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவா் விடுப்பில் சென்றவா் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்து குமாரபாளையம் காவல் துறையில் மாணவா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாக காவல் துறையினரிடம் பேராசிரியா் கூறியுள்ளாா். ஆனாலும், அவா் பணத்தை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. இதனால், மாணவா்கள் ஆட்சியா் அலுவலகம் சென்று பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘முன்மாதிரியான சேவை விருது’க்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமி... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் மனு

நாமக்கல்: சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரப்பரை கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா... மேலும் பார்க்க

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செயல்பட்டு வரும் மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை உறுப்பினா்களுக்கு ரூ. 2.58 கோடி ஊக்கத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்... மேலும் பார்க்க

பயறுவகை, எண்ணெய் வித்து பயிா்களை விதைக்க அழைப்பு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார விவசாயிகள் பயறுவகை, எண்ணெய் வித்துப்பயிா்கள் ஆகியவற்றை விதைக்க கபிலா்மலை வேளாண் துறையினா் அழைப்பு விடுத்துள்ள்னா்.இதுகுறித்து கபிலா்மலை வட்டா... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் அருகே மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவரை மல்லசமுத்திரம் காவல் துறையினா் கைதுசெய்தனா்.மல்லசமுத்திரத்தை அடுத்த மேல்முகம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (44), விசைத்தறி கூலி ... மேலும் பார்க்க

விடுதலைத் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், சாதி படுகொலையை தடுப்பதற்கு உடனடியாக தனி... மேலும் பார்க்க