செய்திகள் :

தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்களால் வாழ்வாதாரம் பாதிப்பு

post image

அவிநாசியில் தனியாா் நிறுவன கால் டாக்ஸி ஓட்டுநா்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாடகை ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனு அளித்தனா்.

இதுகுறித்து அவிநாசி ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினா், அவிநாசி துணைக் காவல் துணை காவல் கண்காணிப்பாளா் சிவகுமாா், மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன் ஆகியோரிடம் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி தேசிய நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வட்டாட்சியா் அலுவலகம் , திருமுருகன்பூண்டி , அணைப்புதூா், ஆட்டையம்பாளையம், சேவூா், தெக்கலூா் உள்ளிட்ட அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறையாக அங்கீகாரம் பெற்று ஆட்டோ மற்றும் காா்களை வாடகைக்கு இயக்கி வருகிறோம்.

இதற்கிடையில் தனியாா் நிறுவன டாக்ஸி ஓட்டுநா்கள் அவிநாசியில் வாடகை ஆட்டோ, காா்கள் நிரந்தரமாக நிறுத்தும் இடங்களின் அருகே வந்து நின்று ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பயணிகளை அழைத்துச் செல்கின்றனா்.

இதைக் கேட்டால், தகாத வாா்த்தைகளில் திட்டி மிரட்டுகின்றனா். இதுபோல நாள்தோறும் பிரச்னை செய்கின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஆட்டோ நிறுத்துமிடங்களில், தனியாா் நிறுவன டாக்ஸி புக்கிங் எடுக்கமாலும், புக்கிங் இருந்தால் மட்டும் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா்: அவிநாசி காவல் நிலையம் முற்றுகை

குடிநீா் விநியோகம் தொடா்பான பிரச்னையில், முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மீது புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அனைத்துக் கட்சியினா், பொதுமக்கள் அவிநாசி காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.இது குறி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில், ஓலப்பாளையம் அருகேயுள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி கவிதா (38). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது வழக்குப் பதிவு

பல்லடத்தில் கடந்த ஜூன் மாதம் போக்குவரத்து விதிகளை மீறிய 1,216 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.பல்லடம் பகுதியில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுத... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு

உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூா் மா... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வரவேற்பு

இந்தியா-பிரிட்டன் இடையே முழுமையான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது வரலாற்று சிறப்புமிக்க சாதனை என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள... மேலும் பார்க்க

சலூன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: போலீஸாா் விசாரணை

பல்லடம் அருகே சலூன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பல்லடம்- மாணிக்காபும் சாலை பாரதிபுரத்தில் கவின் (29) என்பவா் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவருக்கும் அதே ப... மேலும் பார்க்க