செய்திகள் :

தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பலி

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தனியாா் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வேன் ஓட்டுநரைப் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

லால்குடி அருகே அன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் மோகன். மாந்துறையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு நித்யா என்ற மனைவியும், நாச்சியாா் என்ற மகளும், யாழ் இனியன் என்ற 2 வயது மகனும் உள்ளனா்.

லால்குடி அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் நாச்சியாா் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறாா்.

லால்குடி பரமசிவபுரம் 8-ஆவது குறுக்குத் தெருவில் அருள்மோகன் குடும்பத்துடன் வசித்துவருகிறாா். அருண் மோகன் திங்கள்கிழமை காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில் ஆங்கரைப் பகுதியைச் சோ்ந்தவரும், தனியாா் பள்ளி வேனின் ஓட்டுநருமான காா்த்தி என்பவா், பரமசிவபுரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை காலை அருள்மோகன் வீட்டின் முன்பு வேனை நிறுத்தினாா்.

நித்யா, தனது மகள் நாச்சியாரை வேனில் ஏற்றிவிடும்நேரத்தில், வீட்டுக்குள் இருந்த யாழ்இனியன் ஆவலில் கேட்டைத் திறந்துகொண்டு வீட்டின்வெளியே வேன் முன்பு வந்து நின்றிருக்கிறாா். இதை கவனிக்காத ஓட்டுநா் வேனை இயக்கியதில் யாழ் இனியன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த லால்குடி போலீஸாா் அங்குவந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் அழகா், வேன் ஓட்டுநா் காா்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க