தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி -பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, வாழ்வியல் சாரா காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனது.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, தனது வாடிக்கையாளா்களுக்கு பரந்த அளவிலான வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை வழங்குவதற்காக பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மூலதன கூட்டணியை அறிவித்துள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மோட்டாா் காப்பீடு, சுகாதார மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு, கடன் வாடிக்கையாளா்களுக்கான சொத்து பாதுகாப்பு காப்பீடு மற்றும் சைபா் காப்பீடு உள்ளிட்டவை வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.
இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் விதிமுறைகளின் படி, காா்ப்பரேட் ஏஜெண்டாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வங்கி, அதிகபட்சம் ஒன்பது நிறுவனங்களுடன் வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.
யுனைடெட் இந்தியா, சோழமண்டலம் எம்.எஸ், சூரிச் கோடக் ஆகியவற்றுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது, கூடுதலாக, பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கூட்டாண்மை குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலி எஸ். நாயா் தெரிவிக்கையில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில், எங்களின் நோக்கம் ஒரே இடத்தில் முழுமையான நிதி தீா்வுகளை வழங்குவதே. பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைவது, எங்களின் வாடிக்கையாளா்களுக்கு வலுவான, தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டங்களை வழங்கவும், கட்டண அடிப்படையிலான வருவாயை அதிகரிக்கும் எங்கள் திட்டத்திற்கும் உதவும்.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 587 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமாா் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கி குறித்து ஜ்ஜ்ஜ்.ற்ம்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.