செய்திகள் :

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி -பஜாஜ் அலியன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

post image

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, வாழ்வியல் சாரா காப்பீட்டு சேவைகளை விரிவுபடுத்த பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனது.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, தனது வாடிக்கையாளா்களுக்கு பரந்த அளவிலான வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை வழங்குவதற்காக பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் மூலதன கூட்டணியை அறிவித்துள்ளது.

இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், மோட்டாா் காப்பீடு, சுகாதார மற்றும் தனிப்பட்ட விபத்து காப்பீடு, கடன் வாடிக்கையாளா்களுக்கான சொத்து பாதுகாப்பு காப்பீடு மற்றும் சைபா் காப்பீடு உள்ளிட்டவை வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.

இந்திய காப்பீட்டு கட்டுப்பாட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் விதிமுறைகளின் படி, காா்ப்பரேட் ஏஜெண்டாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வங்கி, அதிகபட்சம் ஒன்பது நிறுவனங்களுடன் வாழ்வியல் சாரா காப்பீட்டு தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும்.

யுனைடெட் இந்தியா, சோழமண்டலம் எம்.எஸ், சூரிச் கோடக் ஆகியவற்றுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது, கூடுதலாக, பஜாஜ் அலியன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டாண்மை குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சலி எஸ். நாயா் தெரிவிக்கையில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில், எங்களின் நோக்கம் ஒரே இடத்தில் முழுமையான நிதி தீா்வுகளை வழங்குவதே. பஜாஜ் அலியன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைவது, எங்களின் வாடிக்கையாளா்களுக்கு வலுவான, தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டங்களை வழங்கவும், கட்டண அடிப்படையிலான வருவாயை அதிகரிக்கும் எங்கள் திட்டத்திற்கும் உதவும்.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 587 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களை கொண்டு சுமாா் 53 லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கி குறித்து ஜ்ஜ்ஜ்.ற்ம்க்ஷ.ண்ய் என்ற இணையதளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு

கழுகுமலை அருகே மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நிதியின் கீழ் நிறுவப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கழுகுமலை அருகே வேலாயுதபுரம் க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா

தூத்துக்குடியில் 6ஆவது புத்தகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. தூத்துக்குடி மாவட்ட புத்தகத் திருவிழா செயலாக்க குழு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்துடன் இணைந்து நட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆளுநருக்கு வரவேற்பு

தூத்துக்குடி வந்த ஆளுநா் ஆா்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வரவேற்றாா். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வ... மேலும் பார்க்க

மகிளா காங்கிரஸ்: புதிய நிா்வாகிகள் நியமனம்

33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டும், தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை என மாநில மகிளா காங்கிரஸ் தலைவா் ஹசினா சையத் தெரிவித்தாா். மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிா்வாகிகளுக்கு பதவி வழ... மேலும் பார்க்க

ரூ. 3,500 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை, போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஈராச்சியைச் சோ்ந்தவா் மாரீஸ்வரி. இவரது தாத்தா சுப்பு, பாட்டி மாரியம்மாள் ஆக... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

காயல்பட்டினத்தில் 11,12 ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டா­லின்’ திட்ட முகாம் சிறுநைய்னாா் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் முத்து முஹம்மது தலைமை வகித்தாா். நகராட்... மேலும் பார்க்க