தரமில்லாத 1,178 டன் விதைகளை விற்பனை செய்ய தடை!
தரம் இல்லாத காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7.80 கோடி மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தரமான விதைகளைப் பயன்படுத்துவது மட்டுமே மகசூலை அதிகரிக்க செய்யும். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த, விதை சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம் செயல்படுகிறது.
ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், திருப்பூா் மாவட்டத்தில் 6 வட்டாரங்கள் உள்ளன. இங்குள்ள அரசு, அரசு சாா்பு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை உறுதி செய்ய விதை சட்டம், விதை விதிகள் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை மூலம் கண்காணிக்கப்படுகிறது.
ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் விதை ஆய்வு பிரிவில் கடந்த 4 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 667 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து, 19 ஆயிரத்து 188 விதை மாதிரிகள் எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது, தரம் குறைவால் 831 விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
அதன்படி, ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முளைப்பு திறன் குறைபாடு காரணமாக 23 விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும், 296 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.