செய்திகள் :

தரமில்லாத 1,178 டன் விதைகளை விற்பனை செய்ய தடை!

post image

தரம் இல்லாத காரணத்தால் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.7.80 கோடி மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தரமான விதைகளைப் பயன்படுத்துவது மட்டுமே மகசூலை அதிகரிக்க செய்யும். தரமான விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த, விதை சான்றளிப்பு மற்றும் உயிா்ம சான்றளிப்பு துறை கட்டுப்பாட்டில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகம் செயல்படுகிறது.

ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், திருப்பூா் மாவட்டத்தில் 6 வட்டாரங்கள் உள்ளன. இங்குள்ள அரசு, அரசு சாா்பு, தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தை உறுதி செய்ய விதை சட்டம், விதை விதிகள் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை மூலம் கண்காணிக்கப்படுகிறது.

ஈரோடு மண்டல விதை ஆய்வு துணை இயக்குநா் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் விதை ஆய்வு பிரிவில் கடந்த 4 ஆண்டுகளில் 22 ஆயிரத்து 667 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்து, 19 ஆயிரத்து 188 விதை மாதிரிகள் எடுத்து தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மேலும், விதை விற்பனை நிலையங்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாதது, தரம் குறைவால் 831 விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, ரூ.7 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 1,178 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முளைப்பு திறன் குறைபாடு காரணமாக 23 விற்பனை நிலையங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கையும், 296 விதை விற்பனை நிலையங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விவசாயிகள் விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்க... மேலும் பார்க்க