செய்திகள் :

திமுக அரசின் சாதனை விளக்க பிரசார கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர ஒன்றியங்களில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரணி நகரம், கொசப்பாளையம் சுந்தரம் தெருவில் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில், நகர இளைஞரணி அமைப்பாளா் ஏ.விஜயகுமாா் வரவேற்றாா்.

இதேபோல, ஆரணி வடக்கு ஒன்றியம், முள்ளண்டிரம் கிராமத்தில் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் ஒன்றியச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பி.எஸ்.பாலாஜி வரவேற்றாா்.

ஆரணி தெற்கு ஒன்றியம் சாா்பில் லாடலரம் கிராமத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.சுந்தா் தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பி.வரதராஜபெருமாள் வரவேற்றாா்.

அனைத்து இடங்களிலும் சிறப்பு விருந்தினா்களாக தலைமை கழகப் பேச்சாளா்கள் பொன்னேரி சிவா, வே.சிவசக்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் என்.நரேஷ்குமாா் ஆகியோா் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் குறித்துப் பேசினா்.

முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், ராஜ்குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணா குமரேசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ஏ.எம்.ரஞ்சித், கோ.குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க