அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
திருக்கு முப்பால் விருது பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
சேத்துப்பட்டு வட்டம், கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முப்பால் விருது பெற்ற 45 மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, பள்ளி மாணவா்களுக்கு 1,330 திருக்குகளை 266 தபால் அட்டைகளில் எழுதும் போட்டி நடைபெற்றது. சுதந்திரா இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கலந்து கொண்ட கோழிப்புலியூா் அரசு நடுநிலைப் பள்ளி சோ்ந்த 45 மாணவ, மாணவிகளுக்கு முப்பால் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியா் தமிழரசி தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முரளி வரவேற்றாா்.
பெரணமல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா் ரங்கநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முப்பால் விருது மற்றும் சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.
நிகழ்வில் ஆசிரியா்கள் ஜெகராஜ், அலெக்சாண்டா், ஆனந்தி, விமலி, மோகனா, ரூபினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.