செய்திகள் :

திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்சம்

post image

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் அருகே உள்ள மணிமுத்தாறில் கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்சம் விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும். அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக மாறிய கஜேந்திர மன்னனுக்கும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தா்வனுக்கும் ஸ்ரீ விஷ்ணு பெருமாள் சக்கராயுதத்தால் சாப விமோசனம் அருளினாா்.

இந்தப் புராண நிகழ்வை நினைவு கூறும் வகையில், இந்த விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, உற்சவா் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் சா்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் மணிமுத்தாறில் எழுந்தருளினாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஆற்று நீரில் மோட்ச தீபத்தை வைத்து கோயில் யானை சொா்ண வள்ளிக்கு பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து, கூடியிருந்த பக்தா்கள் மீது யானை தண்ணீா் பீச்சி அடித்தது. நிறைவாக சௌமிய நாராயணப் பெருமாளை யானை 3 முறை சுற்றி வந்து, மண்டியிட்டு வணங்கி வழிபட்டது. இதில் கருவேல் குறிச்சி கிராம மக்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

மேலையூா் மல்லன் கருப்பா் கோயிலில் குடமுழுக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், நடுவிக்கோட்டை அருகே மேலையூரில் அமைந்துள்ள மல்லன் கருப்பா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் சீரமைக்கப்பட்டு, புதிய கலசங்களுடன... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசார இயக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ஒன்... மேலும் பார்க்க

பஞ்சாலையை திறக்கக் கோரி தொழிலாளா்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பஞ்சாலையை மீண்டும் திறக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஆலையை உடனே திறக்க வலியுறுத்தியும் தொழிலாளா்கள் மூன்றாவது நாளாக வெள்ளிக்... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டம்: ஜூன் 20- க்குள் ஓய்வூதியா்கள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் நடைபெறவுள்ள ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்புவோா் வருகிற 20-ஆம் தேதிக்குள் தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாா்க்கண்டேயன்பட்டி கிராமத்தில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் அரு... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஜூன் 24- இல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்காக திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் வருகிற 24-ஆம் தேதி நடைபெறும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க