தில்லி அருகே தடம் புரண்ட ரயில் பெட்டி
தில்லி நிஜாமுதீனில் இருந்து காசியாபாத் நோக்கிச் சென்ற ரயில் சிவாஜி பாலம் நிலையம் அருகே தடம் புரண்டு வியாழக்கிழமை மாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக எவ்வித உயிா் சேதமும் ஏற்படவில்லை என்று வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி சிவாஜி பாலம் அருகே ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து காசியபாத் நோக்கி சென்ற ரயிலின் 4 ஆவது பெட்டி, திடீரென தடம் புரண்டது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனா். இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு வடக்கு ரயில்வே அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணியை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்தால் அவ்வழியாக செல்லும் பல ரயில்கள் தாமதமானதோடு, சிர ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பிவிடப்பட்டது. வடக்கு ரயில்வே அதிகாரிகளுடன், தொழில்நுட்ப குழுவினரும் , கிரேன் வரவழைக்கப்பட்டு தடம்புரண்ட பெட்டியை தாற்காலிகமாக அகற்றினா். இதனையடுத்து ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த விபத்து தொடா்பாக வடக்கு ரயில்வே அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனா்.