செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: 'அமைச்சர் சேகர் பாபுவுடன் பேச விருப்பமில்லை' - போராட்டக் குழுவினர்

post image

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நேற்று நள்ளிரவில் நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு அமைச்சருடன் பேச விருப்பம் இல்லை என்றும், அதிகாரிகளுடன் பேசவே விரும்புவதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

போராடும் மக்கள்
போராடும் மக்கள்

அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, துணை மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் போராட்டக் குழுவுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நீண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்த அமைச்சர் சேகர் பாபு கடுமையாகவும் பேசியிருந்தார். 'பணி நிரந்தரம் தரோம்னு நாங்க எதுவும் வாக்குறுதி கொடுக்கவில்லையே...' எனப் பேசியிருந்தார்.

அமைச்சரின் இந்த ஸ்டேட்மெண்ட்டும் பேச்சுவார்த்தை அறைக்குள் அவர் பேசிய சில விஷயங்களும் போராட்டக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியது.

சேகர் பாபு
சேகர் பாபு

சங்கடம் ஏற்படுவதை தவிர்க்க விரும்புகிறோம்

இன்று மதியம் 2 மணிக்கு மேல் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த போராட்டக் குழுவினர், 'அரசுத் தரப்பு அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தைகளுன் பலன் தருமா எனத் தெரியவில்லை. ஒருவேளை திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த நினைத்தால் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதே நல்லது. அமைச்சருக்கு எங்களின் நன்றியையும், பரஸ்பரம் சங்கடம் ஏற்படுவதை நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம் என்பதையும் தெரியப்படுத்துங்கள்.' எனக் கூறியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

"எம்.ஜி.ஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை!" - தொல்.திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"தம... மேலும் பார்க்க

பாமக பொதுக்குழு முதல் விசிக ஆர்ப்பாட்டம் வரை - 09.08.2025 முக்கியச் செய்திகள்!

Pஆகஸ்ட் 9 முக்கியச் செய்திகள்தேனி பங்களாமேடு பகுதியில் 14 வயது சிறுவன் பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் என்ஜின் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சல்மான் கானை தொடர்பு கொண்டதற்கா... மேலும் பார்க்க

"எம்.ஜி.ஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்... மேலும் பார்க்க

'பக்கம் எண் 44, வாக்குறுதி எண் 285' - திமுகவின் வாக்குறுதியும் பொய் பேசிய சேகர் பாபுவும்?

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் 9 வது நாளாக போராடி வருகின்றனர். தங்கள் மண்டலங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது பணி நிரந்தரமுமே அவர்களின் கோரிக்கை. போராட்டக்குழுவுடன் ப... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: "தேவையற்ற பொதுத் தேர்வுகள், அநீதியான நுழைவுத் தேர்வுகள்" - முதலமைச்சரை பாராட்டிய கமல்!

பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், "இந்தக் கல்விக்கொள்கை, சமத்துவத்தையும் சமூகநீதியையும் சேர்த்தே போதிக்கிற... மேலும் பார்க்க

"3, 5, 8ம் வகுப்பு பிள்ளைகளுக்கு தேர்வு வைப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டோம்" - சீமான் பேச்சு!

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசு, மாநில கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியிருக்கிற... மேலும் பார்க்க