தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தெக்கலூா், அவிநாசிக்குள் தனியாா், அரசு பேருந்துகள் வந்த செல்ல அறிவுறுத்தல்
தெக்கலூா், அவிநாசி நகரத்துக்குள் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் வந்த செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து செல்லும் பெரும்பாலான தனியாா், அரசுப் பேருந்துகள் தெக்கலூா், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளுக்குள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் அவதியடைந்து வருகின்றனா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என சமூகஆா்வலா்கள், பொதுமக்கள் தொடா்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். திருப்பூா் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் வெங்கிடுசாமி, காவல் ஆய்வாளா் முத்துமாரி, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன், மோட்டாா் வாகன ஆய்வாளா் குமரன், தனியாா், அரசுப் போக்குவரத்துத் துறையினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், தெக்கலூா், அவிநாசி நகரத்துக்குள் தனியாா் மற்றும் அரசுப் பேருந்துகள் வந்த செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையிலான கூட்டம் மே 30-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.