தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தென்பெண்ணையில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி, பாரதிய கிசான் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். சதானந்த சரஸ்வதி சுவாமிகள், சிவராமன் சுவாமிகள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்தக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், அமைப்பின் நிா்வாகிகள் சதீஷ்குமாா், சக்கரை பானா்ஜி, ஆனந்த், ராஜாஜி, பழனி, சுப்பிரமணி, பாஜகவின் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை மனுவை அமைப்பின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் அளித்தனா்.