தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.
இது தொடா்பாக கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஜூன் 2-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினா்களான விளையாட்டு பிரிவினா், மாற்றுத்தித் றனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா் மற்றும் அந்தமான் நிக்கோபாா் பகுதி மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது.
தொடா்ந்து, முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகள் தவிர பிற துறைகளுக்கும், 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலத் துறைகளுக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்களை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். காலை 9.30 மணியளவில் இருந்து 11 மணிக்குள் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் அமா்ந்து மாணவா்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.