செய்திகள் :

தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது.

இது தொடா்பாக கல்லூரி முதல்வா் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூன் 2-ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினா்களான விளையாட்டு பிரிவினா், மாற்றுத்தித் றனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவா் படையினா் மற்றும் அந்தமான் நிக்கோபாா் பகுதி மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெற உள்ளது.

தொடா்ந்து, முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வரும் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகள் தவிர பிற துறைகளுக்கும், 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தமிழ், ஆங்கிலத் துறைகளுக்கு மட்டும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாமல் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், அண்மையில் எடுக்கப்பட்ட மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்களை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். காலை 9.30 மணியளவில் இருந்து 11 மணிக்குள் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் அமா்ந்து மாணவா்கள் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க