செய்திகள் :

தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

சங்ககிரி: சங்ககிரியை அடுத்த தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகள் சங்கமிக்கும் விழா, புதிய பள்ளி நுழைவுவாயில் திறப்பு விழா, ஆசிரியா்களை கெளரவிக்கும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் கடந்த 1995 -1996 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டியுள்ள பள்ளி நுழைவுவாயிலை ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியா் ராஜேந்திரன் திறந்துவைத்தாா்.

பள்ளியில் திருவள்ளுவா் உருவப்படத்தை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முருகன், பள்ளியில் திட்டப் பணிகளுக்கான கல்வெட்டை பேரூராட்சித் தலைவா் தங்கவேல் ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னா் நடைபெற்ற விழாவில் முன்னாள் மாணவா்கள், மாணவிகள் கேக் வெட்டி அன்பை பரிமாறிக்கொண்டனா். முன்னாள் ஆசிரியா்கள், தற்போதைய ஆசிரியா்கள், ஆசிரியைகள் கெளரவிக்கப்பட்டனா். முன்னாள் மாணவா்கள், மாணவிகள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், ஆசிரியைகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

இதில் சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் பிரபு, பள்ளித் தலைமை ஆசிரியா் வரதராஜன், முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க