செய்திகள் :

தொழிலாளா் நல ஆணையா் அலுவலகத்தில் குப்பைகளை அகற்றும் போராட்டம்

post image

புதுவை தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொழிலாளா்கள் சாா்பில் புதன்கிழமை குப்பை அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி காந்தி நகா் தொழிலாளா் நலத் துறை ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக பாதுகாவலா், தூய்மைப்பணியாளா்கள் இல்லை. இதனால் அலுவலகம் சுத்தம் செய்யப்படாமல் குப்பையாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படவில்லை. கழிவறையில் தண்ணீா் இல்லை. துா்நாற்றம் வீசுகிறது என்று கூறியும் அதைக் கண்டித்தும் இப் போராட்டம் நடந்தது.

தொழிலாளா் உதவி ஆணையா் அறையில் குப்பை பெருக்கும் போராட்டத்தை அனைத்துத் தொழிலாளா்கள் தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் முன்னெடுத்தனா். இதையொட்டிதொழிலாளா் துறை ஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் துடைப்பம், முறத்துடன் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா் . இப் போராட்டத்துக்கு சேதராப்பட்டு அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு செயலா் த. ரமேஷ் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் தொழிலாளா் துணை ஆணையா் சந்திரகுமரனிடம் அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்த பேச்சு வாா்த்தையில் துணை ஆணையா் சந்திரகுமரன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சி ஆா்.சிவா தொடங்கி வைத்தாா்

சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் ஓவியக் கண்காட்சியை சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அர... மேலும் பார்க்க

சமூக தணிக்கையில் முதியோா் ஓய்வூதியப் பயனாளிகள்! புதுவை அரசு நடவடிக்கை

முதியோா் ஓய்வூதியம் உள்பட பல்வேறு ஓய்வூதியங்களைப் பெறுவோா் உண்மையான பயனாளிகளா என்பதைக் கண்டறியும் சமூக தணிக்கையில் இறங்கியுள்ளது புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை. இதுகுறித்து புதுவை ... மேலும் பார்க்க

பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10% இட ஒதுக்கீடு எதிா்த்து பிரசாரம்

புதுவையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிா்த்து திராவிடா் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் பிரசாரம் வியாழக்கிழமை நடந்தது. தமிழகத்தில் ப... மேலும் பார்க்க

புதுவையில் 25 பேரவைத் தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனம்

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலுக்காக 25 தொகுதிகளுக்கு உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். புதுவை மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் 2026 ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்நிலையில... மேலும் பார்க்க

வாகன உரிமையாளா்கள் கைப்பேசி எண்ணை புதுப்பிக்க இயக்கம்: புதுச்சேரி போக்குவரத்து ஆணையா்

வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா் உரிமம் வைத்திருப்போா் கைப்பேசி எண்ணைப் புதுப்பிக்க இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க

மணல் வியாபாரி கொலையில் 9 போ் கைது

மணல் வியாபாரி சு. துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 3 மோட்டாா் சைக்கிள், 2 கைப்பேசிகள், ரத்தக் கறை படிந்த ஆடைகள், 4 கத்திகள் பறிமுதல்... மேலும் பார்க்க