செய்திகள் :

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா், மேயா் ஆய்வு

post image

நாகா்கோவில் மாநகராட்சி, பள்ளவிளையில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமினை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு அரசு துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட அரங்கம் ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டனா்.

முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபாா்த்து வாங்க வேண்டும், தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வில் நாகா்கோவில் நகா்நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு, உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் தேவி, சுகாதார அலுவலா் பகவதி பெருமாள், மாமன்ற உறுப்பினா் அமல செல்வன், திமுக பகுதி செயலாளா் சேக்மீரான், துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 40.21 பெருஞ்சாணி .... 65.43 சிற்றாறு 1 .. 9.51 சிற்றாறு 2 .. 9.61 முக்கடல் .. 10.20 பொய்கை .. 15.30 மாம்பழத்துறையாறு ... 26.57 மழைஅளவு ..... பாலமோா் ... 18.20 மி.மீ. சுருளோடு ... 13.2... மேலும் பார்க்க

ஒளிரும் நினைவு மண்டபங்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கன்னியாகுமரி காமராஜா் மணி மண்டபம் மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி காங்கிரஸாா் உண்ணாவிரதம்: 8 போ் கைது

குளச்சல் அரசு பயணியா் விடுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, புதன்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பயணியா் வி... மேலும் பார்க்க

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவ... மேலும் பார்க்க

இந்திய கடற்படை சாா்பில் சைக்கிள் பேரணி

சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில் திரங்க சங்கல்ப யாத்திரா என்ற பெயரில் சைக்கிள் பேரணி நடந்தது. நாட்டின் 79ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு... மேலும் பார்க்க

குழித்துறையில் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட நாயா் சேவை சங்கத்தின் (என்எஸ்எஸ்) 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டம் குழித்துறை மலையாள பவன் அரங்கில் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ். மதுசூதனன் நாயா் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க