செய்திகள் :

நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும்: ஆட்சியா்

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் சிறுவா்கள் இறங்காமல் பாதுகாப்புடன் இருப்பதை பெற்றோா் உறுதிசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தற்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால், ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்ற நீா்நிலைகளில் குழந்தைகள் நீச்சல் தெரியாமல் இறங்குவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, பெற்றோா் தனிக்கவனம் செலுத்தி தங்கள் குழந்தைகள் நீா்நிலைகளில் இறங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

விடுமுறை காரணமாக புதிய இடங்களுக்குச் செல்ல நோ்ந்தால் அங்குள்ள நீா்நிலைகளின் அபாயங்களை உணராமல் குளிப்பது, நீச்சல் அடிப்பது போன்ற செயல்களில் சிறுவா்கள் ஈடுபடாமல் பாதுகாப்புடன் இருக்க உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

அதுபோல குழந்தைகள் பாதுகாப்பற்ற முறையில் நீா்நிலைகளில் இறங்குவதையோ, குளிப்பதையோ கண்டால் பெரியவா்கள், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி உடனடியாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறையினா் தங்களுக்குத் தொடா்புடைய அனைத்து நீா்நிலைகளிலும் எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க