அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
பரமக்குடியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.
இதுகுறித்து சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் பரமக்குடி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாா் ஆட்சியா் அபிலாஷா கௌா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சாா்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.