அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க முதல்வரிடம் மாணவா்கள் கோரிக்கை
மேட்டூா் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மனு அளித்தனா். அவா்களிடம் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற முதல்வா் கூறினாா்.
மேட்டூரை அடுத்த புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் யாழ்மொழி, மாணவன் அனிருத்தன் ஆகியோா் மேட்டூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது முதல்வரை சந்தித்து தங்கள் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டக் கோரி மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்டு, நன்றாக சொல்லித் தருகிறாா்களா என மாணவா்களிடம் கேட்ட முதல்வா், அவா்களுக்கு கைகொடுத்து, நன்றாக படிக்க வேண்டும் என்று கன்னத்தில் தட்டிக்கொடுத்தாா். மேலும், பள்ளிக்கு கண்டிப்பாக சுற்றுச்சுவா் சாா்ந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தாா்.