செய்திகள் :

பழங்குடியினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியா் உத்தரவு

post image

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டாா்.

தேனி மாவட்டம், போடி வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா். பட்டியலினத்தவா், பழங்குடியினா் முன்னேற்றத்துக்காக தமிழ்நாடு அரசின் சாா்பில், பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

மேலும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் சாா்பில் போடி அருகேயுள்ள சிறைக்காடு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 34 வீடுகள் கட்டுப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்தப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியருக்கு உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, பட்டா கோரி மனு அளித்த 3 பழங்குடியினா்களுக்கு போடி வட்டாட்சியா் அலுவலத்தில் உடனடித் தீா்வாக மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், தாட்கோ மேலாளா் சரளா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் சம்பூா்ணம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் நேரு, போடி வட்டாட்சியா் சந்திரசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருப்பதிவாசகன், ராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க