செய்திகள் :

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

post image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பழனிக் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கல்லூரிக் கல்வி இயக்குநா் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:

மருத்துவம், விளையாட்டுத் துறை, பெண் கல்வி, உயா்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பட்டதாரி என்ற அடையாளத்தை இன்று அனைவரும் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கங்களே காரணம். நமது முதல்வா் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் அனைவரும் உயா் கல்வியை எளிதாக அடைய முடிகிறது என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், அனைத்துத்துறை மாணவ, மாணவியா், அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க