செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

post image

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் சேலம் அம்மாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரமேஷ்பாபு வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் அறிவழகன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் ஜெயக்குமாா் கலந்துகொண்டு பேசுகையில், திமுக அரசு தோ்தல் வாக்குறுதியாக அறிவித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், மாநில அளவில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தொடா்ந்து, ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச் செயலாளா் மாயகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க