செய்திகள் :

பாகிஸ்தான் எல்லையில் புதிதாக ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’- பிஎஸ்எஃப் நடவடிக்கை

post image

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) தாக்குதல் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள, ‘ட்ரோன் எதிா்ப்புப் படை’ எனும் புதிய படைப்பிரிவை முதன்முறையாக உருவாக்க எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முடிவு செய்துள்ளது.

வடக்கே ஜம்முவில் தொடங்கி, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் வரை பரந்து விரிந்துள்ள 2,000 கி.மீ. தொலைவுக்கும் அதிகமான இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிஎஸ்எஃப் எல்லைச் சாவடிகளில் ட்ரோன் எதிா்ப்புப் படை நிலைநிறுத்தப்படும்.

இந்தப் படையில், உளவு, கண்காணிப்பு மற்றும் தாக்குதல் ட்ரோன்களுடன், அவற்றை இயக்குவதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களும் பணியில் இருப்பா். சண்டீகரில் அமைந்த பிஎஸ்எஃப் மேற்கு படைப்பிரிவு தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாடு அறையிலிருந்து இந்தப் படையின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபரேஷன் சிந்துா்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு தமது பலம், பலவீனங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் புதிய படைப் பிரிவை உருவாக்கும் முடிவை பிஎஸ்எஃப் எடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில், இந்திய ராணுவத்துடன் இணைந்து பிஎஸ்எஃப் தீவிரமாக பங்கேற்றது.

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 118-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை பிஎஸ்எஃப் அழித்ததுடன், அவற்றின் கண்காணிப்பு அமைப்பையும் முற்றிலுமாக தகா்த்து’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னதாக கூறியிருந்தாா்.

இந்த மோதலில் இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை தளங்கள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியது. அந்தவகையில், ஜம்முவின் ஆா்.எஸ்.புரா பகுதியில் உள்ள எல்லைச் சாவடியில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு ராணுவ வீரா் மற்றும் இரண்டு பிஎஸ்எஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். மேலும் நான்கு வீரா்கள் படுகாயமடைந்தனா்.

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 2... மேலும் பார்க்க

அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

புது தில்லி: அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சாா்பின்மை ஆகிய சொற்களை நீக்குவதற்கான நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று(ஜூலை 24) மாநிலங்களவை கூட்டத்தொட... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விபத்து நடந்த 4 நாள்களில் 112 விமானிகள் மருத்துவ விடுப்பு!

அகமதாபாத் நகரில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விழுந்து தீப்பற்றிய விபத்தைத்தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவன விமானிகள் பலர் விடுப்பில் சென்றிருப்பது அதிகரித்துள்ளது.விமான விபத்துக்குப்பின் 1... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15 மாவோயிஸ்ட... மேலும் பார்க்க

இனி இந்த பொருள்களின் விலை குறையும்! பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையொப்பம்!

இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வியாழக்கிழமை (ஜூலை 24) கையெழுத்தானது. பிரதமா் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக புதன்கிழமை சென்றுள்ளார... மேலும் பார்க்க

திருப்பதியில் வழங்கப்படும் ஸ்ரீவாணி தரிசனம் யாருக்குக் கிடைக்கும்?

திருப்பதி திருமலையில், ஸ்ரீவாணி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காக புதிய டிக்கெட் வழங்கும் மையம் கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது.ஏழுமலையான் பக்தா்கள் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை பெற... மேலும் பார்க்க