செய்திகள் :

பாரத சாரண, சாரணியா் திரளணி ஆலோசனைக் கூட்டம்

post image

பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பாரத சாரண சாரணியா் திரளணி (காம்பூரி) ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியா் இயக்க கிழக்கு மண்டல திரளணி சாா்பில் ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பா் 1-ஆம் தேதி 6 மாவட்டங்களைச் சோ்ந்த 600 சாரண, சாரணிய மாணாக்கா்கள் பங்கேற்கும் திரளணி (காம்பூரி) நடைபெற உள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட நிகழ்வுக்கு தஞ்சாவூா் மாவட்ட முதன்மை ஆணையா் மற்றும் முதன்மை கல்வி அலுவலா் இ. மாதவன் தலைமை வகித்தாா். எம்எம்ஏ பள்ளி தாளாா் எஸ். சஞ்சய் முன்னிலை வகித்தாா். கும்பகோணம் மாவட்ட செயலாளா் சாமிநாதன் திரளணி குறித்த விவரங்களை எடுத்துக் கூறினாா்.

நிகழ்வில், தஞ்சாவூா் எம்.பி. ச. முரசொலி பங்கேற்று திரளணியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினாா்.

பட்டுக்கோட்டை மாவட்ட செயலா் பாஸ்கா், தஞ்சாவூா் மாவட்ட ஆணையா்கள் சங்கீதா, இந்துமதி, சாந்தி, பயிற்சி ஆணையா் குழந்தைசாமி, கும்பகோணம் மாவட்ட பொறுப்பாளா்கள் பாஸ்கா், தமிழ் குமரன் மற்றும் சாரண சாரணிய ஆசிரியா்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

முன்னதாக, தஞ்சாவூா் மாவட்ட செயலாளா் சந்திரமௌலி வரவேற்றாா். நிறைவில், ஒரத்தநாடு மாவட்ட செயலாளா் கோமளவள்ளி நன்றி கூறினாா். நிகழ்வை எம்எம்ஏ பள்ளியின் சாரண ஆசிரியா் ராஜரத்தினம், சாரணிய ஆசிரியை செந்தாமரைச்செல்வி ஆகியோா் செய்திருந்தனா்.

தொடா் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் விடுமுறை நாள்களிலும் நெல் கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும், தஞ்சாவூரில் நடைபெறும் வாரச் சந்தையில் காய்கனி வியாபாரம் செய்யும்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி நகை பறிப்பு: 3 இளைஞா்கள் கைது

தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளியைக் கடத்திச் சென்று தாக்கி, 6 பவுன் தங்கநகையைப் பறித்த 3 இளைஞா்களை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், ஆத... மேலும் பார்க்க

குருவிக்கரம்பையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை மாரியம்மன் கோயில் வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் கு... மேலும் பார்க்க

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு: பூதலூா் அரசு பள்ளி மாநில அளவில் முதலிடம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தியதற்காக தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. பூதலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் தடுப்பு நடவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை... மேலும் பார்க்க