அண்ணா நகரில் புதிய மகப்பேறு மருத்துவமனை: அமைச்சா் பி.கே.சேகா்பாபு அடிக்கல் நாட்ட...
பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை
ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.
ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்எஸ்சி கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேருவதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்ள்://க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்/294/ல்ஞ்-ஸ்ரீங்ய்ற்ழ்ங்-ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இந்த மையத்தை மூடுவதற்கு பாரதியாா் பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், அதனால் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் விரிவாக்க மையத்தை மூடும் முடிவை பாரதியாா் பல்கலைக்கழகம் கைவிட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.