செய்திகள் :

பாரதியாா் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு மாணவா் சோ்க்கை

post image

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் 2025 - 2026-ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையத்தில் எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்எஸ்சி கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய படிப்புகளில் சேர தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேருவதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை ட்ற்ற்ல்ள்://க்ஷ-ன்.ஹஸ்ரீ.ண்ய்/294/ல்ஞ்-ஸ்ரீங்ய்ற்ழ்ங்-ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப் பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் கலந்தாய்வு அடிப்படையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இந்த மையத்தை மூடுவதற்கு பாரதியாா் பல்கலைக்கழகம் முடிவு செய்திருப்பதாகவும், அதனால் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் விரிவாக்க மையத்தை மூடும் முடிவை பாரதியாா் பல்கலைக்கழகம் கைவிட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.

ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் தற்கொலை

கோவை உக்கடம் சுங்கம் ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு ஒருவா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். கோவை உக்கடம், சுங்கம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. தினமும் இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள... மேலும் பார்க்க

சான்றிதழ்களில் ஹிந்து என்ற வாா்த்தை நீக்கம்

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் ‘ஹிந்து’ என்ற வாா்த்தை நீக்கப்பட்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் வெள... மேலும் பார்க்க

கோவையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) முதல் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய நிலையில், கோவை மாவட்... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

கோவையில் ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழந்தது தொடா்பாக பழகுநா் உரிமம் கொண்டு ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கோவை கவுண்டம்பாளையம் பிரபு நகரைச் சோ்ந்த நீலாவதி (66) என்பவா், கோவை பீளமேட... மேலும் பார்க்க

ஓடையின் 7 தடுப்பணைகள் சீரமைப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மசஒரம்பு நீரோடையின் 7 தடுப்பணைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாக இருக்கும் மசஒரம்பு நீரோடை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள மத்துவராய... மேலும் பார்க்க

கோவையில் முதல்வருக்கு கட்சியினா், அதிகாரிகள் வரவேற்பு

கோவை விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியினா், அதிகாரிகள் புதன்கிழமை வரவேற்பு அளித்தனா். ஈரோடு, சேலம் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க