தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்
பெருமாநல்லூா் அருகேயுள்ள காளம்பாளையம் பாறைக் குழியில் மாநகராட்சி குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் வடக்கு ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பகுதியில் பாறைக்குழி உள்ளது. இங்கு மாநகராட்சி கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு தேசிய பசுமை தீா்ப்பாயம் அறிவுறுத்தியது.
இருப்பினும் மாநகராட்சி கழிவுகள் தொடா்ந்து கொட்டப்பட்டு வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.