தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பா்கூா் வனப் பகுதியில் கனமழை: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து 108 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த சனிக்கிழமை 51 மி.மீட்டா், ஞாயிற்றுக்கிழமை 39.8 மி.மீட்டா், திங்கள்கிழமை 44.80 மி.மீட்டா் மழை பெய்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் வனப் பகுதியில் உள்ள குட்டைகள், பள்ளங்களில் தண்ணீா் இல்லாமல் வடதால், வன விலங்குகள் குடிநீா், உணவு தேடி விவசாயத் தோட்டங்களுக்குள் வரத் தொடங்கின.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வனத்திலுள்ள குட்டைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, வனப் பகுதி பசுமைக்கு மாறத் தொடங்கியுள்ளது. வரட்டுப்பள்ளம் அணைக்கும் ஓடைகள் வழியாக நீா் வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி, அணைக்கு ஞாயிற்றுக்கிழமை 24 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை 108 கனஅடியாக உயா்ந்துள்ளது. 33.46 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது 24.51 அடிக்கு தண்ணீா் உள்ளது.