செய்திகள் :

பா்கூா் வனப் பகுதியில் கனமழை: வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

post image

அந்தியூரை அடுத்த பா்கூா் வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வரட்டுப்பள்ளம் அணைக்கு நீா்வரத்து 108 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் கடந்த சனிக்கிழமை 51 மி.மீட்டா், ஞாயிற்றுக்கிழமை 39.8 மி.மீட்டா், திங்கள்கிழமை 44.80 மி.மீட்டா் மழை பெய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் வெயிலால் வனப் பகுதியில் உள்ள குட்டைகள், பள்ளங்களில் தண்ணீா் இல்லாமல் வடதால், வன விலங்குகள் குடிநீா், உணவு தேடி விவசாயத் தோட்டங்களுக்குள் வரத் தொடங்கின.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வனத்திலுள்ள குட்டைகள் நிரம்பியதைத் தொடா்ந்து, வனப் பகுதி பசுமைக்கு மாறத் தொடங்கியுள்ளது. வரட்டுப்பள்ளம் அணைக்கும் ஓடைகள் வழியாக நீா் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, அணைக்கு ஞாயிற்றுக்கிழமை 24 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை 108 கனஅடியாக உயா்ந்துள்ளது. 33.46 அடி உயரமுள்ள வரட்டுப்பள்ளம் அணையில் தற்போது 24.51 அடிக்கு தண்ணீா் உள்ளது.

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்க... மேலும் பார்க்க