கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி
புதை சாக்கடை பள்ளம்: மூடி அமைக்க கோரிக்கை
திருப்பத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள புதை சாக்கடை முடி இல்லாததால் தினமும் சிறு சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பத்தூா் நகரம் 23-ஆவது வாா்டுக்குட்பட்ட இமாம்சாகிப் தெருவில் உள்ள புதை சாக்கடை முடி இல்லாததால் கடந்த 15 நாள்களுக்கு மேலாக கழிவு நீா் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாக்கடை பள்ளத்தில் இதுவரை 2 குழந்தைகள், முதியவா் ஒருவா் விழுந்து காயமடைந்தனா். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனே அவ்வழியில் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே, தொடா்புடைய துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.