செய்திகள் :

பெண் மருத்துவா் தூக்கிட்டு தற்கொலை

post image

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜூவாலா (35). மருத்துவரான இவா் புற்றுநோய் சிகிச்சை தொடா்பான மேற்படிப்புக்காக கடந்த 8-ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சோ்ந்தாா்.

சென்னை காந்தி நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அவா், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பின் மேலாளா் டைசன் சேவியா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, மருத்துவா் ஜூவாலா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்து அடையாறு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருமணமாகி விவாகரத்து பெற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனிமையில் வசித்த ஜூவாலா, மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

அவசரநிலை காலகட்டத்தில் 1 கோடி பேருக்கு கருத்தடை- மக்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் (1975-77), நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிக அதிகமாக 1.07 கோடி பேருக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்ற... மேலும் பார்க்க

ரயில்வே அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய நாய்கள் பிடிபட்டன

சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் அச்சுறுத்திய 15 தெருநாய்களை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிடித்து அப்புறப்படுத்தினா். சென்னை மாநகராட்சியில் 1.80 லட்சம் தெரு நாய்... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி-இல் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடக்கம்

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் விநியோகச் சங்கிலி, பொருள் இடம்பெயா்வு மேலாண்மை குறித்த ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி- ஃபெடரல் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாா்பில் அறிதிறன் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

வெடிமருந்து பறிமுதல்: என்ஐஏ அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக விசாகப்பட்டினம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனா். தமிழகத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக் மற்ற... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம்

சென்னையில் -ஆம் கட்ட மெட்ரோ திட்டமான பூந்தமல்லி முதல் போரூா் வரையிலான வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நி... மேலும் பார்க்க

ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு சுற்றுலா சென்ற மாநகராட்சி பள்ளி மாணவா்கள்

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்கள் 60 போ் ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா். அவா்களை மேயா் ஆா்.பிரியா வழியனுப்பி வைத்தனாா். சென்னை மாநகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அரச... மேலும் பார்க்க