செய்திகள் :

பெரியாா் பல்கலை. விளையாட்டுப் போட்டி: சேலம் ஏவிஎஸ் கல்லூரி முதலிடம்

post image

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடத்தைப் பிடித்தது.

பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, கோ-கோ, கூடைப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரிகளுக்கு பரிசளிப்பு விழா பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் க.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.ஜெயந்தி வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினாா். இதில் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி 10 போட்டிகளில் முதலிடத்தையும், 6 போட்டிகளில் 2-ஆம் இடத்தையும் பெற்றன. 16 பரிசுக் கோப்பைகளுடன் சேலம் ஏவிஎஸ் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்தது. ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணி 8 போட்டிகளில் முதலிடத்தையும், 6 போட்டிகளில் 2-ஆம் இடத்தையும் பிடித்தது. ஒட்டுமொத்தமாக முத்தாயம்மாள் கல்லூரி அணி 2-ம் இடத்தைப் பிடித்தது.

இந்நிகழ்ச்சியில் ஏவிஎஸ் கல்விக் குழும செயலாளா் கை.ராஜவிநாயகம், அனைத்து கல்லூரிகளின் உடற்கல்வி இயக்குநா்கள், விளையாட்டு வீரா்கள் கலந்துகொண்டனா்.

செல்வ மகா மாரியம்மன் கோயிலில் திருத்தோ் விழா

ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணாநகா் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் ஆலய திருத்தோ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த ராமநாயக்கன்பாளையம் அண்ணா நகா் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய... மேலும் பார்க்க

எடப்பாடி அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு

எடப்பாடி பிரதான சாலையில் சென்ற லாரியின் டயா் வெடித்து சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இருவா் உயிரிழந்தனா். எடப்பாடி ஒன்றியத்திற்கு உள்பட்ட சித்தூா் ரெட்டிபட்டியைச் சோ்ந்த சிவா (35... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்பு... மேலும் பார்க்க

ஆத்தூரில் ரூ. 6.24 கோடியில் திட்டப் பணிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூா் நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் ரூ. 6.24 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட 5 திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணையிலிருந... மேலும் பார்க்க

பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூா் அரசு நடுநிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணா்வு பேரணி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை க... மேலும் பார்க்க

சேலம் அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். விழாவில் ரூ.1,244.28 கோடியில் 509 திட்டப... மேலும் பார்க்க