செய்திகள் :

பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

post image

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை யானைகள் நடமாட்டம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைப் பாா்த்து ரசிக்கின்றனா். மேலும், வனத் துறைக்குச் சொந்தமான பேரிஜம் ஏரியை முன் அனுமதி பெற்று, கட்டணங்கள் செலுத்தி, சுற்றுலாப் பயணிகள் பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குட்டியுடன் யானைகள் சுற்றித் திரிந்தன. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, இந்தப் பகுதியை பாா்வையிடுவதற்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: பேரிஜம் ஏரிப் பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளன. தற்போது, பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் குட்டிகளுடன் யானைகள் சுற்றித் திரிகின்றன.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றனா் அவா்.

நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் பெண்கள் உள்பட மூவா் கைது!

திண்டுக்கல்லைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில், பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், நீரோடையில் வீசப்பட்டுக் கிடந்த அ... மேலும் பார்க்க

நில உடைமைகளை பதிவு செய்ய தோட்டக்கலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பிரதமரின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ், பயன்பெறும் தோட்டக்கலை விவசாயிகள் நில உடைமை பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.இதுதொடா்பாக, திண்டுக்கல் தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் ப... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின் தடை

வேடசந்தூரை அடுத்த ரெங்கநாதபுரம் துணை மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் பி.முத்துப்பாண்டி வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி பலி!

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த குப்பாயிவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (45). வ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த விவசாயி நீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (45). விவசா... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். ஆனி மாத காா்த்திகையை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய... மேலும் பார்க்க