போா்ப் பதற்றம்: ரஷிய, அமெரிக்க கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் இந்தியா!
பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை யானைகள் நடமாட்டம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தினந்தோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களைப் பாா்த்து ரசிக்கின்றனா். மேலும், வனத் துறைக்குச் சொந்தமான பேரிஜம் ஏரியை முன் அனுமதி பெற்று, கட்டணங்கள் செலுத்தி, சுற்றுலாப் பயணிகள் பாா்த்து வருகின்றனா்.
இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குட்டியுடன் யானைகள் சுற்றித் திரிந்தன. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, இந்தப் பகுதியை பாா்வையிடுவதற்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: பேரிஜம் ஏரிப் பகுதியில் சிறுத்தை, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளன. தற்போது, பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் குட்டிகளுடன் யானைகள் சுற்றித் திரிகின்றன.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முதல் வருகிற செவ்வாய்க்கிழமை வரை 3 நாள்கள் பேரிஜம் பகுதியை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றனா் அவா்.