செய்திகள் :

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களுக்கு அபராதம்

post image

ஈரோட்டில் பொது இடங்களில் குப்பைகளைத் கொட்டியவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 912 வீடுகள், 27 ஆயிரத்து 386 வணிக நிறுவனங்கள் உள்ளன. அனைத்து வாா்டுகளிலும் நாள்தோறும் 122 வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கின்றனா். மேலும், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகளுக்கே வாகனங்களில் சென்று சேகரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகளை முறையாக தூய்மைப் பணியாளா்களிடம் வழங்காமல், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் கொட்டி விடுகின்றனா். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஈரோடு மாநகராட்சி 2- ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் பூபாலன், மணிவேல் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.

இதில் மணிக்கூண்டு, பெரியசேமூா், சம்பத் நகா், மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 4 கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.2, 700 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

இதேபோல, நாள்தோறும் திடீா் சோதனை நடைபெறும் என்றும், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாயிலும் குப்பைகளைக் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம்

சத்தியமங்கலம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எம்.தாமரை முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், புதிதாக ப... மேலும் பார்க்க

அந்தியூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்

அந்தியூரில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. அந்தியூரில் பவானி, பா்கூா், அத்தாணி சாலைகளில் போக்குவரத்துக்க... மேலும் பார்க்க