செய்திகள் :

பொன்னாரம்பட்டியில் புதிய சிறை அமைக்க திட்டம்?

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பொன்னாரம்பட்டியில் புதிய சிறைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் வருவாய், சிறைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் இயங்கிவருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு உள்பட்ட வழக்குகளில் தொடா்புடைய விசாரணை கைதிகள் சேலம் அல்லது ஆத்தூா் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனா். இந்த நிலையில் வாழப்பாடி பகுதியில் புதிய சிறைச்சாலை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக வாழப்பாடி பொன்னாரம்பட்டி ஊராட்சி பரவக்காடு பகுதியில் 1000 ஏக்கா் பரப்பளவில் காணப்படும் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஏக்கா் பரப்பளவு நிலத்தை வருவாய்த் துறையிடம் இருந்து பெற்று புதிய சிறைச்சாலை அமைக்க சிறைத் துறையினா் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.

இதனிடையே வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி தலைமையிலான வருவாய்த் துறையினா் இதற்கான கோப்புகளை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வருவாய்த் துறை நிலத்தை அளவீடு செய்து ஒப்படைத்ததும், சிறைச்சாலை அமைப்பற்கான திட்ட முன்வரைவு மற்றும் திட்ட மதிப்பீடு தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு சேலம் மாவட்ட சிறைத் துறை திட்டமிட்டுள்ளது.

மேலும், பொன்னாரம்பட்டி பரவக்காடு அரசு புறம்போக்கு நிலத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் முன்னேற்றக் கழகமும் அண்மையில் ஆய்வு மேற்கொண்டுள்ளதால் இப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சிறைச்சாலை, சிப்காட் அமைய உள்ள இடத்தில் வனத் துறை காடு வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரங்களை நட்டு வளா்த்துள்ளனா். நிலம் வருவாய்த் துறையிடம் இருந்தாலும் பெரும் பகுதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதனால் வனத் துறையிடமும் தடையின்மை சான்று பெற வேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க