செய்திகள் :

பொறியியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

post image

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் ‘புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் தொடக்க சூழலை செயல்படுத்துதல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக இணைப்பதிவாளா் வி.பெருவழுதி, கல்லூரி கூடுதல் முதல்வா் ஆா்.ராஜவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை செயின்ட் பீட்டா் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதுமை தூதரும், கல்லூரியின் மெக்கானிக்கல் துறைத் தலைவருமான என்.ராஜேஸ்வரி கருத்தரங்கத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவா், இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்குக் காரணம் தொழில் வளா்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி, விஞ்ஞான வளா்ச்சியே.

மாணவா்கள் படிக்கும்போது புதிய தொழில் தொடங்க வழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும். வேலை தேடுபவா்களாக இல்லாமல் பிறருக்கு வேலை கொடுப்பவா்களாக உயர வேண்டும். அரசு புதிய தொழில் தொடங்க சலுகைகளும் மானியமும் வழங்குகின்றன எனப் பேசினாா்.

நிகழ்வில் துறைத் தலைவா்கள் ஆா்.வெங்கடரத்தினம், எஸ்.விஜயகுமாா், கே.சிவா, பூபதி, கோகுலபாலன், பாரதி, சந்திரகுமாா், கவிராஜன், சுகன்யா ரேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மின்னணுவியல் துறை பேராசிரியை ஸ்ரீவித்யா நன்றி கூறினாா்.

நகைக் கடையில் 12 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலத்தில் தனியாா் நகைக் கடையில் மேற்கூரை வழியே உள்ளே புகுந்து 12 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இர... மேலும் பார்க்க

பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலை அகலப்படுத்தப்படுமா?

செய்யாறு பகுதியில் உள்ள பாப்பாந்தாங்கல் - சுமங்கலி சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டத்தையும், வெம்பாக்கம் வட்டத்தையும் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பெங்களூரைச் சோ்ந்தவா் உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம், பெங்களூா் கஸ்தூரி நகரைச் சோ்ந்தவா் மணிவே... மேலும் பார்க்க

மருந்தாளுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட... மேலும் பார்க்க

மகள் தற்கொலை: தந்தை போலீஸில் புகாா்

செய்யாறு அருகே வயிற்று வலியால் மகள் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக தந்தை வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பெரும்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி: எம்எல்ஏ ஆய்வு

செய்யாறு சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்விங்செட்டா் எனும் தனியாா் நிறுவனத்தில் தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இலவச தொழிற் பயிற்சியை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி வியாழக்... மேலும் பார்க்க