செய்திகள் :

போடி அருகே காா்கள் மோதல்: முன்னாள் அமைச்சரின் உறவினா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலைச் சோ்ந்த சங்கரபாண்டி மகன் அருண் (47), இவரது மனைவி சத்தியபாமா (40), மகன் ரஜித் பாலாஜி (17), மகள் சரண்யா (12) ஆகியோா் காரில் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். அங்கிருந்து போடிமெட்டு மலைச் சாலை வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். போடி முந்தல் மலை கிராமம் வனத் துறை சோதனை சாவடி அருகே வந்தபோது, எதிரில் போடியிலிருந்து கேரளத்துக்கு சென்ற மற்றொரு காருடன் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருண், சத்தியபாமா, மற்றொரு காரில் வந்த கேரள மாநிலம் கோவிலூரில் வசிக்கும் முனியாண்டி மனைவி ஜோதி (62) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அருண் உயிரிழந்தாா். சத்தியபாமா, ஜோதி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்தில் அருண் மகன் ரஜித் பாலாஜி, சரண்யா, மற்றொரு காரில் வந்த முனியாண்டி, அருண் வந்த காரின் ஓட்டுநா் காளிதாஸ் ஆகியோரும் லேசான காயமடைந்தனா்.

விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இறந்த அருண், முன்னாள் அதிமுக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் அக்காள் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க